பிரிஸ்பேன் டெஸ்டில் ரோகித் சர்மாவை ஆட்டமிழக்க செய்த நாதன் லயன், ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட்-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்: நாதன் லயன்
பதிவு: ஜனவரி 16, 2021 16:25
ரிஷப் பண்ட், நாதன் லயன்
சிட்னி டெஸ்டில் 407 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா செல்லும்போது, இந்தியா தோல்வியடைந்து விடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர் அடித்த ரன்கள்தான் இந்தியாவை டிரா செய்ய வைக்க உதவியது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் முதலில் நாதன் லயன் பந்தை எதிர்கொள்ள திணறினார். பின்னர் அதிரடியாக விளையாடி துவம்சம் செய்தார். அந்த அதிரடிதான் அவருக்கு எமனாக முடிந்தது. 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியிலும் எனது பந்தை அவர் துவம்சம் செய்ய விரும்புவார். அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த பவுலர். அவருக்கு என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சி செய்தேன். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வெடிப்பு உள்ளது. அதை நோக்கியே பந்து வீச முயற்சி செய்வேன். ரிஷப் பண்ட் எனது பந்தை எப்போதுமே அடித்து விளையாடக்கூடியவர். அவருக்கு பந்து வீசுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு பந்து வீசுவது சிறந்த போட்டியாக இருக்கும்’’ என்றார்.
Related Tags :