செய்திகள்
சாய்னா நேவால்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- சாய்னா நேவால் தோல்வி

Published On 2021-01-15 23:59 GMT   |   Update On 2021-01-15 23:59 GMT
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 2-வது சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் 23-21, 14-21, 16-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் புசனனிடம் போராடி தோல்வி அடைந்தார். 

புசனனுக்கு எதிராக சாய்னா தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸி ஜியா லீயை (மலேசியா) எதிர்கொள்ள இருந்த முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களம் இறங்காமலேயே விலகினார். 

அடுத்த வாரம் தொடங்கும் மற்றொரு தாய்லாந்து தொடருக்குள் உடல்தகுதி பெற்று விடுவேன் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்-அஸ்வினி ஆகிய இந்திய ஜோடியினரும் தங்களது ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Tags:    

Similar News