செய்திகள்
ரெய்னா, புவனேஷ்வர் குமார்

ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆட்டம் வீண்: உ.பி.யை வீழ்த்தியது பஞ்சாப்

Published On 2021-01-10 22:25 IST   |   Update On 2021-01-10 22:25:00 IST
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் சுரேஷ் ரெய்னா அரைசதமும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தியும் உத்தர பிரதேச அணியால் வெற்றி பெற முடியவில்லை.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20-யில் பஞ்சாப் - உத்தர பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்த பஞ்சாப் அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களே எடுக்க முடிந்தது.

அடுத்து உத்தர பிரதேச அணி 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் மாதவ் கவுசிக் (21), த்ருவ் ஜுரெல் (23) ஓரளவிற்கு ரன்கள் அடித்தனர். அடுத்து வந்த ரெய்னா அரைசதம் அடித்தார். இருந்தாலும் 50 பந்தில் 56 ரன்கள் எடுத்த போதிலும் உ.பி.யால் வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களே எடுத்தது. இதனால் உத்தர பிரதேசம் 11 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

Similar News