செய்திகள்
பிசிசிஐ கூட்டம்

2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல்

Published On 2020-12-24 15:58 IST   |   Update On 2020-12-24 19:56:00 IST
2022 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகளை 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கபிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 10 அணிகள் 2022 சீசனில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News