செய்திகள்
கோப்புபடம்

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2020-12-19 06:44 GMT   |   Update On 2020-12-19 06:44 GMT
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி கோவா அணியை எதிர்கொள்கிறது.

கோவா:

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

சென்னையின் எப்.சி. 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

சென்னையின் எப்.சி. 6-வது ஆட்டத்தில் கோவா அணியை இன்று இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.

சென்னை அணி தொடக்க ஆட்டத்துக்கு பிறகு வெற்றி பெறவில்லை. இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு உள்ளது. கோவாவை வீழ்த்தி 2-வது வெற்றி சென்னை அணிக்கு கிடைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

கோவா அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கோவா 7 முறையும், சென்னை அணி 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

நேற்று நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் ஜாம்செட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. அந்த அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 10 புள்ளிகளுடன் ஜாம்செட்பூர் 5-வது இடத்தில் உள்ளது.

கவுகாத்தி அணி முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News