செய்திகள்
தவான் - கேஎல் ராகுல்

ரன்குவிப்பில் முதலிடத்தில் உள்ள ராகுலை தவான் முந்துவாரா?

Published On 2020-11-10 06:46 GMT   |   Update On 2020-11-10 06:46 GMT
ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ள கே எல் ராகுலை டெல்லி அணியின் தவான் முந்துவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
துபாய்:

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மென்களில் ஒருவரான ஷிகர் தவான் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

இந்த ஐ.பி.எல். சீசனில் தவான் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 16 ஆட்டத்தில் 603 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் உள்ளார். அவர் 2 சதமும், 4 அரை சதமும் அடித்துள்ளார்.

இந்த போட்டியில் இருந்து வெளியேறிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தான் ரன் குவிப்பில் முதல் இடத்தில் உள்ளார். அவர் 14 ஆட்டத்தில் 670 ரன் (1 சதம், 5 அரை சதம்) எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை குவிப்போருக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைக்கும். இதை தவான் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்றைய இறுதிப்போட்டியில் அவர் 68 ரன்களை எடுத்தால் தான் முதல் இடத்தை பிடிக்க முடியும். அதற்காக தவான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த போராடுவார்.

டேவிட் வார்னர் (ஐதராபாத்) 548 ரன்னுடன் 3-வது இடத்திலும், இஷான் கி‌ஷன், குயின்டன் டிகாக் (இருவரும் மும்பை) 483 ரன்னுடன் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.

அதிக விக்கெட் கைப்பற்றும் வீரர்களுக்கு ஊதா நிற தொப்பி கிடைக்கும். தற்போது டெல்லி அணி வீரர் ரபடா 29 விக்கெட் (16 ஆட்டம்) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். மும்பையை சேர்ந்த பும்ரா 27 விக்கெட்டுடன் (14 ஆட்டம்) 2-வது இடத்தில் உள்ளார்.

இன்றைய இறுதிப்போட்டியில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவும். அதிக விக்கெட்டை கைப்பற்றி முதல் இடத்தை பிடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
Tags:    

Similar News