செய்திகள்
ஜான்டி ரோட்ஸ்

சுவீடன் நாட்டில் குடியேறுகிறார் ஜான்டி ரோட்ஸ்

Published On 2020-09-10 10:44 GMT   |   Update On 2020-09-10 10:44 GMT
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கேயே குடியேறுகிறார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் ஜான்டி ரோட்ஸ். இவர் சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறார்.

ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சுவீடன் கிரிக்கெட் பெடரேசனுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களில் சிறந்த ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளது. எனது குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறேன். இது ஒரு ஆலோசனை பாத்திரம் இல்லை. நான் நீண்ட காலமாக செய்ய விரும்பும் ஒன்று.

தற்போது குழந்தைகளுக்கு 13, 10, 5, 3 வயது ஆகிறது. எப்போதாவது ஒரு இடத்தில் இருந்து நகர முடியும் என்றால், தற்போது அது தேவை’’என்றார்.
Tags:    

Similar News