செய்திகள்
ரோகித் சர்மா

உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ பதிவு

Published On 2020-08-23 07:13 GMT   |   Update On 2020-08-23 07:13 GMT
ராஜீவ் கேல் ரத்னா விருது பெற இருக்கும் ரோகித் சர்மா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘ஹிட்மேன்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா.

நேற்று முன்தினம் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்து கொடுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 

ரோஹித் ஷர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில் ‘‘வணக்கம் தோழர்களே. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் என் மீது காட்டிய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிலேயே சிறந்த விளையாட்டு வீரருக்காக கொடுக்கப்படும் விருதை நான் பெறுவது மிகப்பெரிய பாக்கியம். அதை நினைந்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்தியாவுக்காக நான் மேலும் பல பல பெருமைகளை தேடி தருவேன் என உறுதியளிக்கிறேன். நாம் எல்லோரும் சமூக விலகலை கடைப்பிடித்து வருவதால், உங்கள் அனைவரையும் வெர்ச்சுவலாக ஹக் செய்து கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News