செய்திகள்
வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தலைவர் நஸ்முல் ஹசன்

ஜிம்பாப்வேயை நாங்கள் வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை இல்லை: பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் சொல்கிறார்

Published On 2020-02-20 13:20 GMT   |   Update On 2020-02-20 13:20 GMT
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை என பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. ஒரு போட்டி கைவிடப்பட மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது. அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் வங்காளதேசம் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரேயொரு  போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

சொந்த மண்ணில் வங்காளதேசம் அணி எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஆனால் இந்த முறை ஜிம்பாப்வே அணியை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்று வங்காளதேசம் கிரிக்கெட் போர்டின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக வங்காளதேசம் அணி மோசமான விளையாடி வரும் நிலையில், இதுகுறித்து நஸ்முல் ஹசன் கூறுகையில் ‘‘நான் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் பார்த்து வருவது என்ன வென்றால், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் அது சிறந்ததாக இருக்கும் என்பதைத்தான். ஆனால் அது நடக்கும் என்று என்னால் பார்க்க முடியவில்லை.

எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நான் அவர்களிடம் ஜிம்பாப்வே அணியை எளிதாக நினைத்தால் அது பேரழிவாக இருக்கும் என்று சொல்கியிருக்கிறேன். ஜிம்பாப்வே எங்கே இருக்கிறதோ அங்கே இருக்கிறது. ஆனால் நாம் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கவில்லை. நம்மைவிட அவர்கள் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

யாராவது ஒருவர் என்னிடம் சொந்த மண்ணில் வங்காளதேசம் அணியின் மோசமான ஆட்டம் எதுவென்று கேட்டால், ஆப்கானிஸ்தானிடம் தோற்பது என்பேன். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் ஆப்கானிஸ்தானிடம் தோற்போம் என்றால், ஜிம்பாப்வே அணியிடமும் தோற்க முடியும்.

நமக்கு புதிய மனநிலைத் தேவை. நம்முடைய அணியின் சீனியர் வீரர்கள் அதிக அளவில் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு அணியாக விளையாட வேண்டிய போட்டி.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை தோற்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்களிடம் நான் கூறியிருக்கிறேன. இந்தியாவில் நாம் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது ஒருவர் கூட நாம் மோசமாக விளையாடினோம் என்று கூறவில்லை. ஆனால், பாகிஸ்தான் டி20 தொடரில் வீரர்களின் அணுகுமுறை மற்றும் மனநிலை எனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்தேன்.

சொந்த மண்ணில் நாம் எப்போதுமே தோற்றகடிக்க முடியாத அணியாக இருக்கிறோம். குறைந்தது நான்கு அல்லது ஐந்து அணிகளையாவது அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்க வேண்டும்.

ஜிம்பாப்வே அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருக்கிறேன். திட்டத்தின் வழியே நாம் வேலை செய்ய வேண்டம். கேப்டன் மொமினுல் ஹக் அமைதியானவர். அணியை முன்னெடுத்துச் செல்ல தமிம் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்’’ என்றார்.
Tags:    

Similar News