செய்திகள்
சேலத்தில் ஐபிஎல் போட்டி- தோனி பங்கேற்பது நிச்சயம்: சீனிவாசன் உறுதி
சேலத்தில் நடந்த கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணிக்கு திறந்து வைத்தார்.
இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.