செய்திகள்
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கொல்கத்தா அணியினர்

ஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது கொல்கத்தா

Published On 2020-02-08 16:44 GMT   |   Update On 2020-02-08 16:44 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசாவை வீழ்த்திய கொல்கத்தா அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தா:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 0-0 என சமனிலை வகித்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 2வது பாதியில் கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணா அபாரமாக ஆடி 3 கோல்கள் அடித்தார். 49,60, 63வது நிமிடங்களில் அவர் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஒடிசா சார்பில் 67-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.

இறுதியில், கொல்கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
Tags:    

Similar News