செய்திகள்
பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த சதத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்: ஜெய்ஸ்வால்
இளையோர் உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது.
அதன்பின் இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் அடித்த இந்த சதத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்’’ என்று கூறினார்.
அதன்பின் இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
இதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் அடித்த இந்த சதத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்’’ என்று கூறினார்.