செய்திகள்
பவாத் ஆலம்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுக்கு பிறகு பவாத் ஆலம் சேர்ப்பு

Published On 2019-12-08 09:47 GMT   |   Update On 2019-12-08 09:47 GMT
இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பவாத் ஆலம் இடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. பாகிஸ்தான் - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பேட்ஸ்மேன் 34 வயதான பவாத் ஆலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டில் டெஸ்டில் விளையாடி இருந்தார்.

ஆஸ்திரேலிய தொடரில் 4 இன்னிங்சில் வெறும் 44 ரன் மட்டுமே எடுத்த இஃப்திகார் அகமது கழற்றி விடப்பட்டார். 16 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் அணி வருமாறு:-

அசார் அலி (கேப்டன்), அபித் அலி, ஆசாத் ஷபிக், பாபர் அசாம், பவாத் ஆலம், ஹாரிஸ் சோகைல், இமாம் உல்-ஹக், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது அப்பாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் ஷா, உஸ்மான் ஷின்வாரி.

பவாத் ஆலம் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்துடன் 250 ரன்கள் அடித்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம். கடைசியாக நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டுனெடினில் நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடினார்.

தற்போது உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News