செய்திகள்

50 ஓவர் போட்டிக்கு தயாராக ஐபிஎல் உதவிகரமாக இருந்தது: ஸ்டீவ் ஸ்மித்

Published On 2019-04-30 13:54 GMT   |   Update On 2019-04-30 13:54 GMT
50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக ஐபிஎல் மிகவும் உதவிகரமாக இருந்தது என ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். #IPL201 #ஸ்மித்
ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய இவருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடைவிதித்தது.

இந்த தடையால் ஸ்மித்தால் சரியாக விளையாட முடியவில்லை. வெளிநாடுகளில் நடைபெற்ற பல்வேறு டி20 லீக்கில் விளையாடினார். ஆனால் காயத்தால் தொடர்ச்சியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

வங்காளதேச பிரிமீயர் லீக்கில் விளையாடும்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் நேரடியாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் சிறந்த உடற்தகுதியுடன் விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தார்.



இந்நிலையில் ‘‘ஐபிஎல் தொடர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு தயாராக உதவிகரமாக இருந்தது’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில் ஐபிஎல், சிறந்த வீரர்களுக்கு எதிராக மைதானத்தில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு கொடுத்தது. டி20 கிரிக்கெட் எப்போதுமே 50 ஓவருக்கு தயாராக உதவும் என்று நினைப்பவன் நான். டி20-யின் நீட்டிக்கப்பட்ட ஆட்டம்தான் 50 ஓவர் கிரிக்கெட்’’ என்றார்.
Tags:    

Similar News