செய்திகள்

வார்னரை கட்டுப்படுத்த தவறிவிட்டனர்: பந்துவீச்சாளர்களின் தவறால் தோல்வி - ரகானே

Published On 2019-03-30 08:00 GMT   |   Update On 2019-03-30 08:00 GMT
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களின் சிறிய தவறு தோல்வி காரணமாக அமைந்துள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே கூறியுள்ளார். #Rahane
ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 198 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

நாங்கள் 190 ரன்னுக்கு மேல் குவித்தோம். இது நல்ல ஸ்கோர். இந்த ஆடுகளத்தில் 150-க்கு மேல் எடுத்தாலே சிறப்பான ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் வார்னரின் அதிரடியை கட்டுப்படுத்த தவறவிட்டோம். எங்களது பந்துவீச்சாளர்கள் செய்த சிறிய தவறால் அவர் அபாரமாக ஆடிவிட்டார். இது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் வீரர்கள் பவர்பிளேயை நன்றாக ஆடி ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, இது எளிதான வெற்றி அல்ல. இந்த ஆட்டம் மிகவும் சவாலாகவே இருந்தது. எங்களது இதே அதிரடி ஆட்டம் தொடரும் என்று நம்புகிறேன் என்றார். #Rahane
Tags:    

Similar News