செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - ஆரோன் பிஞ்ச் சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி

Published On 2019-03-25 09:15 GMT   |   Update On 2019-03-25 09:15 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. #PAKvAUS
சார்ஜா:

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 115 ரன்னும் (11 பவுண்டரி) கேப்டன் சோயிப் மாலிக் 60 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்தில் 153 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), உஸ்மான் கவாஜா 88 ரன்னும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ரன்களை எடுத்து இருந்தார்.



இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது போட்டி வருகிற 27-ந்தேதி அபுதாபியில் நடக்கிறது. #PAKvAUS
Tags:    

Similar News