செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் - 5,000 ரன்கள் குவித்து சுரேஷ் ரெய்னா முதலிடம் பிடித்து சாதனை

Published On 2019-03-24 13:17 GMT   |   Update On 2019-03-24 13:17 GMT
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #IPL2019 #CSKvRCB #SureshRaina
ஐபிஎல் 12-ஆவது சீசனுக்கான முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 70 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 5, ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சுரேஷ் ரெய்னா படைத்துள்ளார்.

மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த வீரர் பட்டியலிலும் சுரேஷ் ரெய்னா முதலிடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #CSKvRCB #SureshRaina
Tags:    

Similar News