செய்திகள்

இனவெறி பேச்சு - மன்னிப்பு கேட்டார் சர்ப்ராஸ் அகமது

Published On 2019-01-25 05:00 GMT   |   Update On 2019-01-25 05:00 GMT
சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது, பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது, எதிரணி வீரர் பெலக்வாயோவை இனவெறியுடன் விமர்சனம் செய்தார். அவரை நோக்கி, சர்ப்ராஸ் அகமது “ஏய் கருப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் என்ன பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறி சீண்டினார்.

இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் தனது பேச்சுக்கு சர்ப்ராஸ் அகமது மன்னிப்பு கேட்டுள்ளார். ‘விரக்தியில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகளை யாரும் தவறாக எடுத்து இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. எனது வார்த்தைகளை எதிரணி வீரர்களோ, கிரிக்கெட் ரசிகர்களோ புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை’ என்று சர்ப்ராஸ் கூறியுள்ளார். #SarfrazAhmed #SAvPAK
Tags:    

Similar News