செய்திகள்

ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு -சச்சின் டெண்டுல்கர்

Published On 2018-12-03 10:36 GMT   |   Update On 2018-12-03 10:36 GMT
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND #SachinTendulkar
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

ஆஸ்திரேலிய அணியுடனான தொடர் குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும், 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும். அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்தது. தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது. என்று கூறினார். #AUSvIND #SachinTendulkar
Tags:    

Similar News