செய்திகள்
கடைசி டி20- இந்தியாவிற்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா
சிட்னியில் நடைபெற்று வரும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகபந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.
8.3 ஓவரில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ஆர்கி ஷார்ட்டை 33 ரன்னிலம், மேக்ஸ்வெல்லை 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட்டை டக்அவுட்டிலும் குருணால் பாண்டியா வெளியேற்றினார்.
இதனால் 90 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஆஸ்திரேலியா. இறுதியில் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 25 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் 7 பந்தில் 13 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா 38 ரன்களும், புவி 33 ரன்களும், கலீல் அகமது 35 ரன்களும் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வேகபந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்தது.
8.3 ஓவரில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ஆர்கி ஷார்ட்டை 33 ரன்னிலம், மேக்ஸ்வெல்லை 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட்டை டக்அவுட்டிலும் குருணால் பாண்டியா வெளியேற்றினார்.
இதனால் 90 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஆஸ்திரேலியா. இறுதியில் வந்த மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 150-ஐ தாண்டியது. பும்ரா வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 25 ரன்களும், நாதன் கவுல்டர் நைல் 7 பந்தில் 13 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பும்ரா 38 ரன்களும், புவி 33 ரன்களும், கலீல் அகமது 35 ரன்களும் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.