செய்திகள்

தல டோனிக்கு திருவனந்தபுரத்தில் 35 அடி உயர கட்-அவுட் அமைத்த ரசிகர்கள்

Published On 2018-10-31 15:01 GMT   |   Update On 2018-10-31 15:01 GMT
கேரள மாநில டோனி ரசிகர்கள் சார்பில் தல டோனிக்கு திருவனந்தபுரத்தில் 35 அடி உயர் கட்-அவுட் அமைத்து அமர்க்களம் செய்துள்ளனர். #MSDhoni
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. தனது ஹேர்ஸ்டைல், அதிரடி ஆட்டம், ஹெலிகாப்டர் ஷாட், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி மூலம் உலகளவில் கோடான கோடி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

கேரள மாநிலத்தில் ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது. இதற்கான இந்திய அணி திருவனந்தபுரம் சென்றுள்ளது.

திருவனந்தபுரம் வந்துள்ள டோனியை பாராட்டும் வகையில் ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் சார்பில் 35 அடி உயர கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர். 
Tags:    

Similar News