செய்திகள்

அரையிறுதியில் விளையாடவில்லை - குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷனுக்கு வெண்கலம்

Published On 2018-08-31 08:08 GMT   |   Update On 2018-08-31 08:08 GMT
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன், அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. #AsianGames2018 #BoxerVikasKrishan
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஷ் கிரிஷன் 75 கிலோ எடைப்பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் அமான்குல் அபில்கானுடன் மோதுவதாக இருந்தது. ஆனால், கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் உடற்தகுதி பெறவில்லை.



காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விகாஷ் கிரிஷனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. காலிறுதியில் சீன வீரருடன் மோதியபோது காயம் மேலும் தீவிரமடைந்தது. எனினும், கடுமையாக போராடி அந்த போட்டியில் வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், விகாஸ் கிரிஷன் அரையிறுதியில் பங்கேற்பதற்கு மருத்துவ ரீதியாக உடற்தகுதி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே, அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

காயத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்ட விகாஸ் கிரிஷன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் ஆசிய போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று முறை பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #BoxerVikasKrishan

Tags:    

Similar News