செய்திகள்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி - இறுதி போட்டியில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார் கரோலினா மரின்

Published On 2018-08-05 09:48 GMT   |   Update On 2018-08-05 09:57 GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் வீழ்ந்தார் பிவி சிந்து. #PVSindhu #CarolinaMarin
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர் கொண்டார்.

இதில் கரோலினா மரின் 21 -19 என முதல் செட்டில் சிந்துவை வீழ்த்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் 21- 10 என்ற கணக்கில் சிந்துவை அவர் வீழ்த்தினார்.

இதையடுத்து, கரோலினா மரின் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் பிவி சிந்துவை வெற்றி பெற்றார்.
Tags:    

Similar News