செய்திகள்

போராடி தோற்றது பெருமை அளிக்கிறது - விராட் கோலி

Published On 2018-08-05 07:50 GMT   |   Update On 2018-08-05 07:50 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
பர்மிங்காம்:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்வி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

இந்த டெஸ்ட் மிகவும் சிறப்பானது. இந்த போட்டியில் நாங்கள் பலமுறை திறமையை வெளிப்படுத்தினோம். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி ஆடி இருக்கலாம்.

இந்த டெஸ்டில் நாங்கள் போராடி தோற்றது பெருமை அளிக்கிறது. இந்த போராட்டம் பிடித்து இருக்கிறது. நாங்கள் இந்த டெஸ்டில் சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வோம்.

மிகப்பெரிய தொடரில் இதுபோன்ற தொடக்கம் பெருமையானது. பின்வரிசையில் விளையாடும் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

இந்த தோல்வி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டனில் தொடங்குகிறது. #ENGvIND #ViratKohli
Tags:    

Similar News