செய்திகள்
பரபரப்பான நிலையில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- இந்தியாவிற்கு 74 ரன்கள் இலக்கு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். இந்தியா விரைவில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.