search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First Test match"

    • நியூசிலாந்து 291 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் மெட் ஹென்றி அதிரடியாக விளையாடினார்.
    • இலங்கை அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்து இருந்தது.

    நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து இருந்தது.

    இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். அவர் 102 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து 291 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்த நிலையில் மெட் ஹென்றி அதிரடியாக விளையாடினார். அவர் 75 பந்தில் 72 ரன்கள் எடுத்தார்.

    மிட்செல்- ஹென்றி ஆட்டத்தில் நியூசிலாந்து சரிவில் இருந்து மீண்டது. அந்த அணி 107.3 ஓவரில் 373 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், குமாரா 3 விக்கெட்டும், ரஜிதா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பெர்னாண்டோ 28 ரன்னிலும், கருணரத்னே 17 ரன்னிலும் அவுட் ஆனார்கள். 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி 38 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 83 ரன் எடுத்தது. இதன்மூலம், இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களை குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 177 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார்.

    ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் எடுத்து இருந்தது.

    கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி தனது 9வது சதத்தை பதிவு செய்தார். அவர் 120 ரன்னும், ஜடேஜா 66 ரன்னும் (அவுட் இல்லை), அக்ஷர் படேல் 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். டாட் மர்பி 5 விக்கெட் கைப்பற்றினார்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 144 ரன்கள் முன்னிலை, கைவசம் 3 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. ஆட்டம் தொடங்கிய 5-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. ஜடேஜா 70 ரன் எடுத்து இருந்த போது மர்பி பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அவருக்கு கிடைத்த 6-வது விக்கெட்டாகும். ஜடேஜா 185 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 328 ரன்னாக இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு அவரும், அக்ஷர் படேலும் இணைந்து 88 ரன் எடுத்தது. அடுத்து முகமது ஷபி களம் வந்தார். இந்திய அணி தொடர்ந்து ரன்களை குவித்தது. இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களை குவித்தது.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றம் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.
    • இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்றனர்.

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இன்று காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் போடப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மற்றும் பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகின்றனர்.

    • இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது.
    • இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வங்காளதேசம் சார்பில் மெஹதி மற்றும் இஸ்லாம் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

    இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. அந்த அணி, 55.5 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

    சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கில் மற்றும் புஜாரா சதமடித்து அசத்தினர். இதனால் முன்னிலை ரன்களுடன் சேர்த்து வங்காளதேச அணிக்கு 513 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 2வது இன்னிங்க்சில் விளையாடிய வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், வங்காளதேச அணி வெற்றி பெற கடைசி நாளில் 241 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கியது.

    இன்று ஆட்டம் தொடங்கிய 1 மணி நேரத்தில் இந்திய அணி வங்கதேச அணியின் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. #SLvAUS #JhyeRichardson #PatCummins
    பிரிஸ்பேன்:

    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சண்டிமால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் சண்டிமால் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசல் மெண்டீஸ் 14 ரன்னிலும், தனஜெயா டி செல்வா 5 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய, இலங்கை அணி விக்கெட்டுகளை காப்பாற்ற கடுமையாக போராடியது.

    தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா(20), பெரேரா (1) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

    ஆஸ்திரேலியா தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், லயன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். #SLvAUS #JhyeRichardson #PatCummins
    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. #TestCricket #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது. கேப்டன் கேன் வில்லியம்சன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    அதன்பின், ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 83.2 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாபர் அசாம் மட்டும் தாக்குப் பிடித்து 62 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், கிரான்ட்ஹோம், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜீத் ராவல் 46 ரன்னிலும், கேன் வில்லியம்சன் 37 ரன்னிலும் அவுட்டானார்.



    அடுத்து இறங்கிய ஹென்றி நிகோல்ஸ் 55 ரன்களும், வாட்லிங் 59 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இறுதியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 100.4 ஓவரில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.

    மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இரண்டு நாள்கள் உள்ள நிலையில், 139 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டி இருப்பதால் பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. #TestCricket #PAKvNZ
    ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் இமாம் உல் ஹக், மொகமது ஹபீசின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvAUS
    துபாய்:

    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி அந்த அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினர்.
    இருவரும் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    முகமது ஹபீஸ் 172 பந்தில் 12 பவுண்டரியுடன் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். தேனீர் இடைவேளை முடிந்ததும்,
    இமாம்-உல்-ஹக் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து முகமது ஹபீசும் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    தொடர்ந்து இறங்கிய அசார் அலி 18 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ஐரிஸ் சொகைல் 15 ரன்னும், மொகமது அப்பஸ் ஒரு ரன்னிலும் அவுட்டாகாமல் உள்ளனர்.
    டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ள கோலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. #INDvWI #ViratKohli
    ராஜ்கோட்:

    ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கேப்டன் விராட் கோலி 139 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதன்மூலம் 24-வது சதத்தை எட்டிய கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.
     
    72-வது டெஸ்டில் விளையாடும் விராட் கோலி 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 24 சதங்களை அடித்துள்ளார்.

    விராட் கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ரன்கள் (9 டெஸ்ட்) சேர்த்துள்ளார். இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் கோலி தான். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் (10 டெஸ்டில் 719 ரன்) இருக்கிறார்.



    விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

    இவர் ஏற்கனவே 2016-ம் ஆண்டில் 1,215 ரன்களும், 2017-ம் ஆண்டில் 1,059 ரன்களும் எடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் இவர் என்பதும், ஒட்டுமொத்த அளவில் 6-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
     
    ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (தொடர்ந்து 5 ஆண்டு), ஸ்டீவன் சுமித் (4 ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் டிரஸ்கோதிக், கெவின் பீட்டர்சன் (தலா 3 ஆண்டு) ஆகியோர் இச்சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvWI #ViratKohli
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதமடித்த பிரித்வி ஷா, குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். #INDvWI #PrithviShah
    ராஜ்கோட்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நேற்று தொடங்கிய
    முதல் டெஸ்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.  

    டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் பிரித்வி ஷா அறிமுக வீரராக களமிறங்கினார். பிரித்வி ஷா அதிரடியாக ஆடினார். இதனால் அவர் 99 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 134 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதையடுத்து, குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் பிரித்வி ஷா இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.



    இவருக்கு முன்னதாக, மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் சதமடித்து முதலிடம் பிடித்துள்ளார். அவர் 17 ஆண்டு 107 நாட்கள் ஆன நிலையில் டெஸ்டில் சதமடித்தார்.

    18 ஆண்டு 329 நாட்கள் ஆன நிலையில் நேற்று டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இரண்டாவது இந்தியர் பிரித்வி ஷா ஆவார்.
     
    மேலும், குறைந்த பந்துகளில் சதமடித்த மூன்றாவது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் 85 பந்துகளிலும், டுவைன் ஸ்மித் 93 பந்துகளிலும் சதமடித்து உள்ளனர்.

    அறிமுக டெஸ்டில் சதமடித்து அசத்திய பிரித்வி ஷாவுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #INDvWI #PrithviShah
    பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணியின் 1000-மாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரின்  எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த டெஸ்ட் போட்டி இந்தியாவை விட இங்கிலாந்துக்குதான் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இங்கிலாந்து 1877-ம் ஆண்டில் இருந்து இதுவரை 999 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த டெஸ்ட் இங்கிலாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க 1000-வது டெஸ்ட் ஆகும்.

    இந்த டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் இந்தியாவை 31 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.

    இங்கிலாந்து அணி இதுவரை 1000 டெஸ்ட் போட்டிகளில் 358-ல் வெற்றியும், 297-ல் தோல்வியையும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது.

    எட்ஜ்பாஸ்டனில் இதுவரை இங்கிலாந்து 1902-ல் இருந்து 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 28 போட்டிகளில் வெற்றியும், 8-ல் தோல்வியும், 15-ல் டிராவும் செய்துள்ளது.

    1000-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.

    அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா விராட் கோலிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினார். அவர் ஒன்று, இரண்டு ரன்களை எடுத்தார்.

    விராட் கோலி 51 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார்.இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து இறங்கிய மொகமது ஷமி டக் அவுட்டானார். அவரை தொடர்ந்து இஷாந்த் சர்மா 11 ரன்களில் அவுட்டானார்.

    இறுதி வரை ஹர்திக் பாண்ட்யா போராடினார். அவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் அவுட்டானார். இறுதியில், இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது.

    அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    13 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. சாம் குர்ரான் அரை சதத்தால் இங்கிலாந்து 180 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இதையடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 45 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் மேலும் 2 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் அவுட்டானார். இந்தியா விரைவில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    ×