செய்திகள்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார் ரபேல் நடால். #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotro
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நடால் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவும் பலப்பரீட்சை நடத்தினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரபேல் நடால் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் சுற்றை 6-4 என்ற கணக்கிலும், இரண்டாவது சுற்றை 6-1 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-2 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.
இதையடுத்து, ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் டெல்போட்ரோவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.
ரபேல் நடால் இதுவரை 16 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர். இவர் பிரெஞ்ச் ஓபனை 10 முறை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #FrenchOpen2018 #RafaelNadal #MartindelPotr