செய்திகள்

கேக் வெட்டியதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர்

Published On 2018-06-05 05:10 GMT   |   Update On 2018-06-05 05:10 GMT
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்காக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். #waqaryounis #Apologisetofans
இஸ்லாமாபாத்:

வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த போட்டியின்போது முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வக்கார் யூனிஸ் கேக் வெட்டி கொண்டாடினார்.

புனித ரமலான் மாதத்தில் பொது இடத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வக்கார் யூனிஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.



‘வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புனிதமிக்க ரமலான் மாதத்தையும், நோன்பு கடைபிடிப்பவர்களையும் மதித்திருக்க வேண்டும். மன்னியுங்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் வக்கார் யூனிஸ். #waqaryounis #Apologisetofans
Tags:    

Similar News