செய்திகள்

இந்தியா தொடர்- ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் நியமனம்

Published On 2018-05-30 11:18 GMT   |   Update On 2018-05-30 11:18 GMT
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக விளையாட இருக்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளின் கேப்டன்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி செப்டம்பர், ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கிறது. முதலில் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அஷ்டோன் அகர், உஸ்மான் கவாஜா, மேத்யூ ரென்ஷா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அதன்பின் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட் நியமிக்கப்பட்டுள்ளார்.


டிராவிஸ் ஹெட்

இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ‘ஏ’ அணியில் முன்னணி வீரர்களை களமிறக்கியுள்ளது ஆஸ்திரேலியா.
Tags:    

Similar News