செய்திகள்
நான்கு முறை ஐபிஎல் டைட்டில்- ரோகித் சர்மாவுடன் இணைந்தனர் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோகித் சர்மா சாதனையுடன் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு இணைந்துள்ளனர். #IPL2018
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று பேரையும் இடம்பிடித்துள்ளார்.
இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.
இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.
2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.
இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.
2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.