செய்திகள்

டெஸ்ட் அணிக்கு மேக்ஸ்வெல் தகுதியானவர்- ஆலன் பார்டன் சொல்கிறார்

Published On 2018-05-18 13:21 GMT   |   Update On 2018-05-18 13:21 GMT
அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானர் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் இவருக்கு டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் இடம் கிடைத்தது கிடையாது. உள்ளூர் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே இதற்கு காரணம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியது.

இந்நிலையில், ‘‘மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சாளருடன் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர். இதேபோல் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் தேர்வாளர்களின் பார்வை அவர் மீது விழுந்திருக்கும்’’ என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளது.



தற்போது பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக்ஸ்வெல்லிற்கு இடம் கிடைக்கலாம்.
Tags:    

Similar News