செய்திகள்

கொல்கத்தாவுடன் மோதல் - ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்

Published On 2018-04-18 04:43 GMT   |   Update On 2018-04-18 04:43 GMT
ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ஜெய்ப்பூர்:

ஐ.பி.எல். போட்டியின் 15-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்துடன் 9 விக்கெட்டில் தோற்று 2-வது போட்டியில் டெல்லியை 10 ரன்னிலும், 3-வது போட்டியில் பெங்களூரை 19 ரன்னிலும் வென்றது.

2 ஹாட்ரிக், 1 தோல்வியுடன் இருக்கும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் சரக சாம்சன் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

கொல்கத்தா அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ளது. அந்த அணி பெங்களூரை (4 விக்கெட்), டெல்லியை (71 ரன்) வீழ்த்தி இருந்தது. ஐதராபாத் (5 விக்கெட்), சென்னை (5 விக்கெட்), அணிகளிடம் தோற்று இருந்தது. 3-வது வெற்றி ஆர்வத்தில் கொல்கத்தா இருக்கிறது.

இரு அணிகளும் இன்று மோதுவது 16-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 15 போட்டியில் கொல்கத்தா 9-ல் ராஜஸ்தான் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. #IPL2018 # #KKRvRR
Tags:    

Similar News