செய்திகள்

பிரெஞ்ச் ஓபன்: பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி

Published On 2017-05-31 15:20 GMT   |   Update On 2017-05-31 15:20 GMT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.
பாரீஸ் நகரில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வெடோவா ஜோடி ஆஸ்திரேலியாவின் டரியா கவ்ரிலோவா - ரஷ்யாவின் அனாஸ்டாசியா பவ்லியுசென்கோவா ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை சானியா ஜோடி கடுமையாக போராடியது. இறுதியில் 6(5)-7(7) என இழந்தது. ஆனால் 2-வது செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் 2-6 என தோல்வியடைந்து முதல் சுற்றோடு சானியா ஜோடி வெளியேறியது.

ஆனால், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Tags:    

Similar News