செய்திகள்

பி.வி. சிந்து ஒரு இந்தியர்: ஆந்திரா, தெலுங்கானா சர்ச்சைக்கு பயிற்சியாளர் கோபிசந்த் பதில்

Published On 2016-08-22 19:18 IST   |   Update On 2016-08-23 09:07:00 IST
பேட்மிண்டன் வீராங்கனை சிந்து ஒரு இந்தியர் என்று அவரின் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்திருக்கிறார்.
ஐதராபாத்:

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் நேசத்துக்குரியவராக பி.வி. சிந்து மாறியிருக்கிறார்.

ஆனால், சிந்து யாருக்கு சொந்தம் என்பதில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருகிறது. இந்நிலையில் சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் 'சிந்து இந்தியாவிற்கு சொந்தமானவர்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இருந்தாலும், இரண்டு மாநில அரசுகளும் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிடுவதாக இல்லை. இன்று காலை ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிந்துவை வரவேற்க ஆந்திர, தெலுங்கானா என இரண்டு மாநில அமைச்சர்களுமே போட்டிபோட்டு காத்திருந்தனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவிற்கு ஆந்திரா அரசு 3 கோடி ரூபாய் பணத்துடன், 1000 சதுர யார்டு வீட்டுமனை வழங்கப்படும் என்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா அரசு 5 கோடி ரூபாயுடன் 1000 சதுர யார்டு வீட்டுமனை சிந்துவிற்கு பரிசாக வழங்கப்படும் என்று போட்டியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News