செய்திகள்

உலக மல்யுத்த போட்டி: இந்திய வீரர் குர்பிரீத்சிங் தகுதி இழந்தார்

Published On 2016-05-07 08:03 IST   |   Update On 2016-05-07 08:03:00 IST
ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கான 2-வது தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.
ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கான 2-வது தகுதி சுற்றான உலக மல்யுத்த போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.

இந்த போட்டியில் கிரிகோ ரோமன் 75 கிலோ உடல் எடைப்பிரிவில் பங்கேற்க தேர்வாகி இருந்த இந்திய வீரர் குர்பிரீத்சிங் 500 கிலோ கிராம் எடை அதிகமாக இருந்ததால் கடைசி நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தகுதி இழந்தார்.

இதனால் அவரது ஒலிம்பிக் கனவு தகர்ந்து போனது. சமீபத்தில் நடந்த உலக மல்யுத்த போட்டியில் அதிக எடை காரணமாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி இழந்தது நினைவுகூரத்தக்கது. 

Similar News