- உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
- நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது.
உள்ளங்கையின் தன்மைகளை வைத்துக் கூட ஒருவரின் இயல்பு மற்றும் அவரின் தன்மையை நாம் அறிந்து கொள்ள இயலும். இதை பற்றித் தான் இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாக, உள்ளங்கையைத் தொட்டுப் பார்த்து, அதன் கடினத்தன்மை, மென்மைத்தன்மையை வைத்து, சில உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இதன்படி உள்ளங்கைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். மென்மைக்கும், கடினத்துக்கும் இடைப்பட்டது: இப்படியான உள்ளங்கை அமைப்பு பலருக்கு இருக்கும். இவர்கள் புத்தி, பலம் இரண்டையும் கொண்டு பிழைப்பவர்கள். கட்டுப்பாடு மிகுந்தவர்கள். எடுத்த காரியத்தை தாமாகவே முடிப்பார்கள். எனினும் நம்பிக்கைக்கு உரியவர்கள்.
கடினமான உள்ளங்கை : உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். சிற்றின்பத்தில் நாட்டம் இருக்கும். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.
மென்மையான உள்ளங்கை: உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். வாழ்க்கையை நிறைவாக அனுபவிப்பார்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இது போல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்.
மிக பலவீனமான அல்லது மிகக் கடினமான உள்ளங்கை: மிகவும் வித்தியாசமானவர்கள். ஆனால் சமூகத்திற்கு லாயக்கு இல்லாதவர்கள். கோழைகள், கொடியவர்கள், குற்றவாளிகள் ஆகியோருக்கு இத்தகைய உள்ளங்கை அமைப்பு இருக்கும்.
குறுகலான கை: மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். சுயநலம் மிக்கவர்கள். எல்லோரையும் சந்தேகிப்பவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது. தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.
மிக அகலமான உள்ளங்கை: நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்களுக்கு ஸ்திர புத்தி இருக்காது. அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியையும் அபவாதத்தையும் ஏற்கும் நிலை ஏற்படும்.
இராமராஜன்
அகலமான கை: உள்ளங்கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். இவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள்.
உங்கள் உள்ளங்கையின் வண்ணங்களும், உங்கள் இயல்புகளும்: உள்ளங்கையைப் பொறுத்தவரை, வண்ண அமைப்பில் சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு பிரிவுகளாக ரேகை சாஸ்திரம் பிரிக்கிறது.
இதனைக் கொண்டு ஒருவர்களின் குண நலன்கள் வருமாறு:-
மஞ்சள் நிற உள்ளங்கை கொண்டவர்கள்: இவர்கள், ஆரோக்கியக் குறைவு, பயம், பீதி உள்ளவர்கள். மனோபலம் இல்லாதவர்கள். பலவீனமானவர்கள். அறிவாற்றல் குறைந்தவர்கள். சோம்பேறிகள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள். எவரையும் நம்பாதவர்கள், தோல்வியும் துயரமும் வாழ்க்கையில் கொண்டவர்கள்.
ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: இந்த நிறம் கொண்டவர்கள், சுயநலவாதிகள். சிற்றின்பப் பிரியர்கள். பணத்திலும், பதவியிலும் ஈடுபாடு உடையவர்கள். கடுமையான சுபாவம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்வார்கள். அகம்பாவிகள்.
சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை உடையவர்கள், கோபதாபங்கள் கொண்டவராக இருப்பார். ஆனால், பற்றும் பாசமும் உடையவர்கள். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், அவசரக்காரர்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள். நல்லவர்களுக்கு நல்லவர்கள். கெட்டவர்களுக்குக் கெட்டவர்கள்.
இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை கொண்டவர்கள்: ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளிகள். திறமைசாலிகள். பிறருக்காகவும் வாழக்கூடியவர்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். நம்பத்தகுந்தவர்கள்.
உள்ளங்கையில் ஸ்வஸ்திக் சின்னம் இருப்பது மிகவும் மங்களகரமான அறிகுறியாகக் கருதப்படுகிறது, ஸ்வஸ்திக், குறிப்பாக உள்ளங்கையில் காணப்படும் போது, நல்வாழ்வு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் புனித சின்னமாகக் கருதப்படுகிறது.
குரு அல்லது புதன் மேடுபோன்ற சில மேடுகளில் ஸ்வஸ்திக் குறி தோன்றினால், அது ஒருவரின் சொந்த முயற்சியால் பெறப்பட்ட செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கும். ஆன்மீக நாட்டம்:
வியாழன் மேடுகளில் ஸ்வஸ்திக் இருப்பது ஆன்மீகத்தின் மீதான நாட்டத்தையோ அல்லது ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீகத் தலைவருடனான தொடர்பையோ குறிக்கலாம்.
செல்பேசி 9965799409