சிறப்புக் கட்டுரைகள்
null

உலகை ஆளும் எண் கணிதம்

Published On 2026-02-17 16:53 IST   |   Update On 2026-02-17 16:56:00 IST
  • சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது.
  • எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது அவ்வையாரின் வாக்கு.

ஒரு உடலுக்குக் கண்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனித வாழ்க்கைக்கு எண்களும் எழுத்துகளும் மிக முக்கியம். நமது அன்றாட தேவை மற்றும் பயன்பாட்டில் பணம், நேரம், தூரம், வயது, மற்றும் அளவீடுகள் என அனைத்திலும் எண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஒருவரின் வாழ்க்கையை முறைப்படுத்தவும், அன்றாடச் செயல்பாடுகளில் சரியான முடிவுகளை எடுக்கவும் எண்கள் வழிகாட்டுகின்றன. எண் கணிதம் பற்றிய முழுமையான விழிப்புணர்வு உள்ளவர்களே வாழ்க்கையில் வெற்றி அடைகிறார்கள். சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சாதாரண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்ற ஒன்று தேவைப்படுகிறது. உலகில் பல்வேறு விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் மனிதருக்கு பல வரப்பிரசாதமாக உள்ளது. அதில் ஒன்றுதான் என் கணிதம். இதை சில பேர் நக்கல் நையாண்டித்தனமாக இரண்டு எழுத்தை மாற்றி வைத்தால் தலைவிதி மாறிவிடுமா என்று கேட்பார்கள். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி நாம் கவலைபடக் கூடாது. உலகில் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்த பலர் தங்களது பெயரை எண் கணித முறையில் மாற்றி அமைத்த பிறகு வாழ்வாதாரம் உயர்ந்து உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எண் கணிதம் வேறு ஜோதிடம் வேறு கிடையாது. ஜோதிடத்தின் பல்வேறு உட்பிரிவுகளில் எண்கணிதமும் ஒன்றாகும். சுய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளுக்கு ஏற்ப பெயரை அமைத்துக் கொள்வது அனைவரின் சுவாசக் காற்றான மொபைல் போன் எண்கள் மற்றும் வாகன எண்களை அதிர்ஷ்டத்திற்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்வது உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அதிர்ஷ்டம் என்பது புதையல் யோகம் அல்ல. ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்படி வேண்டுமானாலும் தேடி வரலாம். பூமியை பிளந்து தான் அதிர்ஷ்டத்தை பெற வேண்டும் என்ற கணக்கு இல்லை.

தொழில், உத்தியோக ரீதியான அதிர்ஷ்ட லாபமும் புதையல் யோகமே. உண்மையான உழைப்பின் மூலம் வருவது தான் நிலையான நிரந்தரமான அதிர்ஷ்டமாகும். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை ஜாதகம் சரியில்லை என்று புலம்பிக் கொண்டு ஒரே இடத்தில் நின்றால் அதற்குப் பெயர்சோம்பேறித்தனமாகும். அதிர்ஷ்ட எண்களை வங்கி கணக்கு எண், வாகன எண், வீட்டு எண், மொபைல் எண், பெயர் எண் அல்லது முக்கியமான வேலைகளைத் தொடங்கும் தேதிகளாகவும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.

பிறந்த தேதி மற்றும் பெயர் எண்ணுக்கு ஏற்றவாறு தொழில், திருமணம், மற்றும் பெயர் திருத்தம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் ஒருவர் தன் ஆளுமை, பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொண்டு சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

நல்ல வாய்ப்புகளை அடைய தேவையான அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொண்டு வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதேபோல் உழைக்காமல் அதிர்ஷ்டம் வராது. அதிர்ஷ்ட போன் நம்பர் அதிர்ஷ்ட பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் அதிர்ஷ்டத்தை அடைய முடியாது முறையான உழைப்பாளிகளுக்கு சரியான திட்டமிடுதல் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கும். நிற்கும் குதிரைக்கு மதிப்பு இல்லை. ஓடும் குதிரைக்கு மட்டுமே மதிப்பு. வெற்றியை நோக்கி ஓடுபவர்களுக்கு தோல்வி இல்லை வெற்றி புதையலாக மாறும். புதையலை நோக்கி ஓடி காலத்தை நகர்த்துவதை விட உழைப்பை நோக்கி ஓடினால் ஏராளமான தனவரவும் வாய்ப்புகளும் உண்டாகுவது உறுதி. கற்பனையில் அதிர்ஷ்டத்தை நம்பினால் வாழ்க்கை கெட்டுவிடும் என்பது முன்னோர்களின் அனுபவ உண்மை.

பல வெளிநாடுகளில் எண்ணியதை பிரதான சக்தியாக பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பல புதிய உண்மைகளை உலகிற்கு வழங்கியுள்ளார்கள். தற்போது மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த எண்ணியல் கலை சிலருக்கு அசுர வளர்ச்சியையும் பலருக்கு வீழ்ச்சியையும் தருகிறது.

பொதுவாக ஜோதிடம் அறியாத நியுமராலஜி நிபுணர்கள் பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து ஒரு தனி மனிதன் அல்லது நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்து தருகிறார்கள். இது காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சிலருக்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்து விடுகிறது. தவறான அதிர்ஷ்ட எண்ணில் பெயர் மாற்றி வைத்துக் கொண்டால் நிலையான, நிரந்தமான புகழ், பணம், உயர்வு கிடைக்காது. பலர் தவறு எங்கே என்ற புரிதல் இன்றி தொடர் தோல்வியை சந்திக்கிறார்கள். சிலருக்கு பெரிய பெயர் மாற்றத்தைத்தரும் நீயுமராலஜி பலருக்கு ஏன் வெற்றி தருவதில்லை என்ற காரணத்தையும் எல்லோருக்கும் நியூமராலஜி பயன்தர அதை எப்படி பயன் தருவது போன்ற அறிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

 

ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும் அதை சிறப்பாக பெற வேண்டுமானால் உடல் எண் உயிர் எண்ணிற்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும் உடல், உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது.

ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதியின் உடல், உயிர் எண்ணிற்கு ஏற்ற படி பெயர் வைத்துக் கொள்வது உத்தமம். இயலாதவர்கள் உடல், உயிர் எண்களை ஆதிக்கம் செய்யும் கிரகங்களை வழிபாடு செய்வதன் மூலமும் நல்ல பலன்களை பெற முடியும். சிலர் அதிர்ஷ்ட பெயரை பிறந்த ஜென்ம நட்சத்திரப்படியும், சிலர் பிறவி எண் படியும், சிலர் விதி எண் படியும், சிலர் விதி எண்ணிற்கு பொருத்தமான நட்பு எண்ணிலும், பொதுவாக அதிர்ஷ்டம் தரக்கூடிய 1,5,9 ஆகிய எண்ணிலும் பெயரை அமைக்கிறார்கள். இந்த முறைகள் வெகு சிலருக்கு பலன் தருகிறது. பலருக்கு நேர்மறையான பலன்களை மட்டுமே தருகிறது.

ஜாதகப்படி பெயர் அமைத்தல் பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி. பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும். ஜாதகத்தில் வலிமை பெற்ற கிரகத்தின் எண்ணை அல்லது அதன் நட்பு எண்ணின் அடிப்படையில் பெயர் வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

இவ்வாறு தேர்வு செய்யும் எண் ஜாதகரின் சுய ஜாதக லக்ன ரீதியான அசுபர்களாக உள்ள கிரகத்தின் எண்ணின் பெயராக இருக்க கூடாது. ஒருவரின் ஜாதகத்தில் பலமாக உள்ள கிரகம் வாழ்நாள் முழுவதும் ஜாதகத்தை இயக்கும். அதே கிரகம் லக்ன ரீதியான சுபர் எனில் ஜாதகருக்கு சுபபலன்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.

ஜோதிடமும் நியூமராலஜியும்

ஒரு குழந்தை பிறக்கும் பொழுதுவான மண்டலத்திலுள்ள கிரகங்களில் சில கிரகங்கள் வலிமையாக இருக்கலாம். சில கிரகங்கள் வலிமை இழந்து நிற்கும். லக்ன ரீதியான அசுப கிரகம் வலிமை இழந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் லக்ன ரீதியான சுபர் எனில் அதன் தசா புக்தி காலங்களில் நற்பலன்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும். வலிமையற்ற கிரகத்தை பலப்படுத்த பல்வேறு பூஜை பரிகாரமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தாலும் பரிகாரம் குறுகிய காலத்திற்கு மட்டுமே பலன்கள் தரும். ஆனால் நிரந்தரமான பலன்களைத் தருவதில் எண் கணித பெயர்கள் என்றால் அது மிகைப்படுத்தலாகது. வெறும் அதிர்ஷ்டப் பெயரை மட்டும் அமைத்துக் கொண்டால் 25 சதவீதம் மட்டுமே பலன் கிடைக்கும். அந்த நல்ல பெயரை ஜாதகம் பார்த்து பிறந்த எண், விதி எண் இவற்றோடு ஒப்பிட்டு ஒருவருடைய ஜாதகத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய எண்ணில் பெயரை வைத்துக் கொண்டால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

உடல் எண்: ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வருவது உடல் எண் எனப்படும்.

உயிர் எண்: ஒருவருடைய பிறந்த, தேதி, மாதம், வருடம் இவைகளை கூட்டினால் வருவது உயிர் எண் எனப்படும்.

பெயரெண்: ஒருவருடைய பெயருக்கு உண்டான எழுத்துக்களுக்கான எண்களை கூட்ட வருவது பெயரெண் எனப்படும்.

எண்ணும் எழுத்தும்

ஆங்கில மொழியே உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் எண் என்பதால் ஆங்கில எழுத்துக்களே எண் கணித சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் நவ கிரகங்கள் ஆள்வது போல் சில எண்களும் ஆளும். அதன்படி ஒருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய அதிர்ஷ்ட எண்களை கண்டறிந்து அதன்படி பெயரை திருத்தி அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும். உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் 9 எண்களுக்கு மேல் எழுத்துக்கள் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் ஒரு கிரகத்தைச் சார்ந்துள்ளது.

எழுத்துக்கள் எண்கள்

A,I,J,Q,y 1

B,K,R 2

C,G,L,S 3

D,M,T 4

E,H,N,X 5

U,V,W 6

0, Z 7

F, P 8

9ம் எண்ணிற்கு எந்த எழுத்தும் கிடையாது. நவகிரகங்களும் 1 முதல் 9 வரையான எண்களின் ஆளுமைக்கு உட்பட்டது.

எண்கள் கிரகங்கள்

1. சூரியன்

2. சந்திரன்

3. குரு

4. ராகு

5. புதன்

6. சுக்கிரன்

7. கேது

8. சனி

9. செவ்வாய்

பெயரில் சில எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்வதால் வாழ்க்கை மாறாது. ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு ஆளும்கிரகம் உண்டு அந்த ஆளும் கிரகத்திற்கு ஏற்ற எண்களை சூட்சும முறையில் பெயரில் சேர்க்கும் பொழுது வலுவான வாழ்வியல் மாற்றம் நடக்கும். இன்று உலகத்தில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு நபரிடம் இரண்டு முதல் மூன்று செல்போன்கள் உள்ளது. இவ்வளவு ஏன் பிறந்த குழந்தைக்கு கூட சாப்பாடு ஊட்ட செல்போன் தேவைப்படுகிறது. பிறந்த குழந்தையின் பெயரில் தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து அவர்கள் தகவல் தொடர்பு சாதனங்களுடன் தங்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை இணைத்து விடுகிறார்கள். மொபைல் எண் ஜோதிடம் என்பது பிறவி எண் அல்லது விதி எண்ணுடன் மொபைல் எண்களின் கூட்டுத்தொகையை பொருத்தி அதிர்ஷ்டத்தை அடையும் முறையாகும். பத்து இலக்க எண்களையும் கூட்டி ஒற்றை எண்ணாக மாற்ற வேண்டும்,

உதாரணமாக கூட்டு எண் ஒன்று எனில் தலைமை பண்பு அரசியல் அரசாங்க வெற்றி உண்டு. ஐந்து எனில் நல்ல நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வியாபார வளர்ச்சி தொழில் விருத்தி ஆகியவை உண்டாகும். இதுபோல் ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு.

சரியான மொபைல் எண் அமைந்தவர்களின் வாழ்க்கையில் மன நிம்மதி நல்ல பொருளாதார வளர்ச்சி நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோக வாய்ப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்தி தரும். அவரவரின் பிறந்த தேதிக்கு ஏற்றவாறு எண்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்.

இனி வரும் வாரங்களில் நவகிரகங்களின் எண்களில் பெயர்கள் அமைந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய கட்டுரையை நீங்கள் படிக்க முடியும்.பிறந்த நேரம் சரியாக இல்லாவிட்டால் எண் கணிதப் படி பெயர் மொபைல் எண்களை மாற்றி அமைக்கும் போது நல்லது நடக்கும் நல்லது மட்டுமே நடக்கும்.

செல்: 98652 20406

Tags:    

Similar News