புதுச்சேரி

வில்லியனுார் பகுதிகளில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2025-10-09 11:13 IST   |   Update On 2025-10-09 11:13:00 IST
  • எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதுச்சேரி:

புதுவை பொதுப்பணித்துறை சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை வில்லியனுார் எஸ்.எஸ் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை (வியாழக்கிழமை) மதியம் 12 முதல் 2 மணி அப்பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுபோல் 10-ந் தேதி ஆரியப்பாளையம், 11-ந் தேதி கூடப்பாக்கம், 13-ந் தேதி கூடப்பாக்கம் பேட், ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த பகுதிகளில் மேற்கண்ட தேதியில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News