புதுச்சேரி
மூலக்குளம் பகுதியில் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
- உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
புதுச்சேரி:
புதுவை எம்.ஜி.ஆர். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில், மூலக்குளம், டைமண்ட் நகர், மேரி உழவர்கரை, ஜான்குமார் நகர், தட்சணாமூர்த்தி நகர், பாலாஜி நகர், அண்ணா வீதி, ஜெயாநகர், ரெட்டியார்பாளையம்,
புதுநகர், வழுதாவூர் ரோடு, சண்முகாபுரம், சீனிவாசபுரம், ரங்கா நகர், சிவசக்தி நகர், சக்தி நகர், மோதிலால் நகர், குண்டுசாலை, உழவர்கரை, பசும்பொன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும் என பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு தெரிவித்துள்ளது.