இந்தியா
அதிகாலையில் உடற்பயிற்சி.. மாரடைப்பால் அப்படியே சரிந்து உயிரை விட்ட இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
- உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் அதிகாலையில் தெருவில் பயிற்சி செய்து கொண்டுருந்தார்.
- அதிகாலை என்பதால் அந்நேரம் அங்கு யாரும் இல்லை.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரமோத் பிஞ்சோலா. உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி அதிகாலை தெருவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.
அந்த வீடியோவில் பிரமோத் அதிகாலையில் தெருவில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது சோர்வடைந்து அருகில் உள்ள பலகையில் அமர்கிறார். சற்று நேரத்தில் அவர் பலகையில் இருந்து சரிந்து விழுகிறார்.
அதிகாலை என்பதால் அந்நேரம் அங்கு யாரும் இல்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.