இந்தியா
எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன்: யஷ்வந்த் சின்கா
- ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா தோல்வியைத் தழுவினார்.
- யஷ்வந்த் சின்கா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தா :
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா (வயது 84) தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் அடுத்து அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு கொல்கத்தாவில் நேற்று அவர் பதில் அளித்தார். அப்போது அவர், " நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். பொதுவாழ்வில் என்ன பங்களிப்பு செய்வது என்பது பற்றி இனிதான் முடிவு எடுக்க வேண்டும்" என கூறினார்.
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் தொடர்பு கொண்டீர்களா?" என்ற கேள்விக்கு அவர் "இல்லை" என பதில் அளித்தார்.
மேலும், " யாரும் என்னுடன் பேசவில்லை. நானும் யாருடனும் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேசினேன்" என குறிப்பிட்டார்.