இந்தியா

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் - பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம் சம்மன்

Published On 2023-07-07 10:28 GMT   |   Update On 2023-07-07 11:25 GMT
  • பா.ஜ.க. எம்.பி. மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது
  • பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் கடந்த 15-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராடி வந்தனர்.

அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார் கடந்த 15-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், பாலியல் வழக்கில் ஜூலை 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷன் சிங்குக்கு டெல்லி கோர்ட் இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், நீக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன துணை செயலாளர் வினோத் தோமரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

Tags:    

Similar News