ஷ்ரத்தா வாக்கருக்கு நீதி கேட்டு கூட்டம்- மேடையில் ஆணை செருப்பால் தாக்கிய பெண்
- அடிவாங்கிய நபரின் மகன் தனது மகளுடன் ஓடிப்போய்விட்டதாக கூட்டத்தில் தனது குறையை கூறினார்.
- மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை கீழே இறக்கி அனுப்பி வைத்தனர்.
புதுடெல்லி:
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண் அவரது காதலன் அப்தாப் பூனாவாலா படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பெண்ணுக்கு நீதி கேட்டு டெல்லியின் சத்தர்பூரில் உள்ள இந்து ஏக்தா மஞ்ச் என்ற இந்து அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் நடந்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண், மைக்கில் பேசினார். அப்போது அவர் திடீரென அருகில் நின்றிருந்த நபர் ஒருவைரை செருப்பால் தாக்குகிறார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
#WATCH | Chattarpur, Delhi: Woman climbs up the stage of Hindu Ekta Manch's program 'Beti Bachao Mahapanchayat' to express her issues; hits a man with her slippers when he tries to push her away from the mic pic.twitter.com/dGrB5IsRHT
— ANI (@ANI) November 29, 2022
அதில் ஒரு பெண், நீல நிற துப்பட்டவால் முகத்தை பாதி மூடிய நிலையில் பேசுகிறார். அருகில் ஒரு நபர் நின்றுகொண்டிருந்தார். அந்த நபரின் மகன் தனது மகளை அழைத்துக் கொண்டு ஓடிப்போய்விட்டதாக கூட்டத்தில் தனது குறையை கூறினார். மேலும் தனது மகள் காணாமல் போனது குறித்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தாகவும், தன்னை அலைக்கழித்ததுடன், தனது குறையை கேட்கவில்லை என்றும் கூறினார். பின்னர் திடீரென தனது செருப்பை கழற்றி அந்த நபரை தாக்குகிறார். மேடையில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு, அந்த பெண்ணை மேடையில் இருந்து இறக்கினர்.
தாக்கப்பட்ட நபர் மேடையில் அந்த பெண்ணுக்கு அருகில் நின்று தனது மகனுக்கு எதிரான புகாரை பகிர்ந்து கொள்வதைத் தடுக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.