இந்தியா

திருமணமான 36 நாளில் கணவனின் உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி

Published On 2025-06-18 05:00 IST   |   Update On 2025-06-18 06:19:00 IST
  • கொலையை செய்த அவரின் 22 வயது மனைவி சுனிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
  • திருமணத்திற்கு அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் திருமணமான 36வது நாளில் ஒரு பெண் தனது கணவரை உணவில் விஷம் வைத்து கொன்றார்.

இறந்தவர் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்தநாத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையை செய்த அவரின் 22 வயது மனைவி சுனிதா கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

புத்தநாத் சிங் தாய், தனது மகன் மருமகளால் கொலை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

திருமணத்திற்கு அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

அந்தப் பெண் தனது உறவினர்களிடம் புத்தநாத்தை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அவர்கள் ஒன்றாக வாழ முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

இருப்பினும், எந்தப் பிரச்சினையும் இல்லாதது போல், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சுனிதாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பினர் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News