இந்தியா

MGNREGA-ஐ விட VB-G RAM G சிறந்த திட்டம்: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சொல்கிறார்

Published On 2026-01-04 15:41 IST   |   Update On 2026-01-04 15:41:00 IST
  • தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன்.
  • அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட, விபி-ஜி ராம் ஜி சட்டம் சிறந்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் இந்த திட்டம் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறது என குற்றம்சாட்டினார்.

இது தொர்பாக சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:-

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை காப்போம் பிரசாரத்தை தொடங்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது உண்மையில் ஊழலை பாதுகாக்கும் பிரசாரம் ஆகும்.

MGNREGA ஊழலுக்கு இணையான ஒன்றாகிவிட்டது. கிராம சபைகளால் நடத்தப்பட்ட சமூகத் தணிக்கைகளின் கீழ், 10 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன. ஒரே வேலை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. வேலை இயந்திரம் மூலம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மற்றும் சாலைகளைச் சுத்தம் செய்வதாகக் கூறி பணம் முறைகேடாகப் பெறப்பட்டது.

30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 60 வயதிற்கு மேலானவர்கள். மோடி அரசின் கீழ் 8.48 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியல் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. நிரந்தரச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டனவா? அந்தப் பணத்தை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்த முடியுமா?

காங்கிரஸ் ஒரு பொய்களின் தொழிற்சாலை. இப்போது அவர்கள் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

VB-G RAM G திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நலன் சிறப்பாக பாதுகாக்கப்படும். அடுத்த நிதியாண்டில் 1,51,282 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இதில் மத்திய அரசின் பங்கீடு 95,600 கோடி ரூபாயாக இருக்கும். 125 நாட்கள் வேலைக்கான போதுமான பணம் உள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை விட விபி-ஜி ராம் ஜி சிறந்த திட்டமாக இருக்கும். தவறான தகவல் மற்றும் பொய்களை பரப்ப வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியை கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பதிலாக இந்த திட்டத்தை சிறந்ததாக உருவாக்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News