இந்தியா

மணமேடையில் ரூ.20 லட்சம் பணம், கார் கேட்ட மாப்பிள்ளை... மணப்பெண் செய்த செயல் இணையத்தில் வைரல்

Published On 2025-12-15 08:21 IST   |   Update On 2025-12-15 08:21:00 IST
  • வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
  • பலரும் மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.

இன்றைய நவீன காலத்திலும் வரதட்சணை வாங்கி தான் திருமணம் முடிப்பேன் என்று சிலர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்து திருமணமே நின்றுபோய் பேசு பொருளாகி இருக்கிறது. உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன் திருமணக்கோலத்தில் ஊர்வலமாக வந்து மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட தயாராகிறார்.

அப்போது திடீரென மணமகன் எனக்கு 20 லட்சம் ரொக்க பணமும் ஒரு காரும் தந்தால் தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சியடைகிறார்கள். மணமகளின் தந்தை மணமகனின் காலில் விழுந்து கெஞ்சுகிறார் என் மகளை திருமணம் பண்ணிக்கோங்க மாப்பிள்ளை என்று... ஆனால் அதற்கு சற்றும் இடம் கொடுக்காமல் எனக்கு பணம் தான் முக்கியம் என்று சொல்கிறார்.

இதனை பார்த்த மணப்பெண் எனக்கு இந்த திருமணம் வேண்டாம். பண ஆசை பிடித்த இவரிடம் என்னால் நிம்மதியாக வாழமுடியாது என்று கூறி தனது தந்தையை அழைத்துச் செல்கிறார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. பலரும் அந்த மணப்பெண்ணுக்கு ஆதரவாக தங்கள் குரலை எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News