இந்தியா

 மத்திய மந்திரி பியூஸ் கோயல்

நாட்டில் தற்போது சாமானிய மக்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர்- மத்திய மந்திரி பெருமிதம்

Published On 2022-12-07 08:30 GMT   |   Update On 2022-12-07 08:30 GMT
  • பிரதமர் மோடிக்கு நியமன எம்.பி., பி.டி.உஷா நன்றி தெரிவித்தார்.
  • ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரதமர் அக்கறை காட்டுவதாக பேச்சு.

பாராளுமன்ற மாநிலங்களையில் பேசிய மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியுள்ளதாவது: நாட்டில் தற்போது ஒ புதிய பாரம்பரியம் நிறுவப்படுகிறது, சாதாரண பின்னணியில் பிறந்து, சாதாரண வாழ்க்கை நடத்துவோர் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு ஆசிரியர், ஒடிசாவின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய பள்ளியில் பணியாற்றிய அவர் இப்போது குடியரசுத் தலைவர்.

மாநிலங்களவைத் தலைவர் ஒரு விவசாயியின் மகன், தற்போது எங்களது குடியரசு துணைத் தலைவர். நமது பிரதமர் டீ விற்பவர் வீட்டில் பிறந்தவர், சிறுவயதில் ரயில் நிலையத்தில் டீ விற்றார், அதைச் செய்து கொண்டே படித்தார். அவர் தனது வாழ்நாளின் 5 தசாப்தங்களுக்கும் மேலாக சமூகம் மற்றும் இந்த தேசத்தின் சேவைக்காக பாடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


முன்னதாக நியமன எம்.பி. பி.டி.உஷா மாநிலங்களவையில் பேசுகையில் கூறியுள்ளதாவது: ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் மீதான அக்கறைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பது தேசத்துக்குக் கிடைத்த பெருமை. பழங்குடியின சமூகத்தினருக்கு இது மிகப்பெரிய கவுரவம். ஒரு விவசாயியின் மகன் இப்போது துணை ஜனாதிபதி, இது ஒரு புதிய இந்தியா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News