இந்தியா

36 மணி நேர தாமதம் - விமான பழுது நீக்கத்துக்கு பிறகு கனடா திரும்பினார் பிரதமர் ட்ரூடோ

Published On 2023-09-12 16:59 GMT   |   Update On 2023-09-12 16:59 GMT
  • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணம் செய்யவிருந்த விமானம் கோளாறால் நிறுத்தப்பட்டது.
  • விமானத்தின் பழுது சரிசெய்யப்பட்டு பிரதமர் ட்ரூடோ இன்று கனடா புறப்பட்டார்.

புதுடெல்லி:

டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் ஜி20 உச்சி மாநாடு நடந்துது. இதையடுத்து, உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.

இதற்கிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயணம் செய்யவிருந்த விமானம் கோளாறால் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கனடா பிரதமரின் விமானத்தின் பழுது நீக்கப்பட்டு இன்று சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், 36 மணி நேர தாமதத்துக்குப் பிறகு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது அலுவலக குழுவினர் இன்று கனடா புறப்பட்டுச் சென்றனர்.

36 ஆண்டுகால அனுபவம் நிறைந்த இந்த விமானம் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சிக்கலை சந்தித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபரில் இந்த விமானம் ஒட்டாவா நகருக்கு திரும்ப இருந்தது. விமானம் ட்ரூடோவை சுமந்து கொண்டு திரும்பிய 30 நிமிடங்களில் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News