இந்தியா

சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி: சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு குறித்து கெஜ்ரிவால்

Published On 2024-02-20 13:36 GMT   |   Update On 2024-02-20 13:36 GMT
  • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.
  • ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம் பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. சிக்கலான நேரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி மத்திய அரசின் செயல்பாட்டையும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.விற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News