இந்தியா

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் இலங்கைக்கு எஸ்கேப்? வெளியான பரபரப்பு தகவல்

Published On 2025-05-03 17:14 IST   |   Update On 2025-05-03 17:14:00 IST
  • சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.
  • சோதனைக்கு பிறகு காலதாமதமாக இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளன.

இந்தியாவில் தேடப்படும் நபர் இலங்கைக்கு விமானத்தில் தப்பியதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய 6 பேர், விமானத்தில் இலங்கை தப்ப முயன்றதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் எதிரொலியால், சந்ததேகத்தின் அடிப்படையில் சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் இலங்கை சேவை நிறுவனம் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சென்னை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவல் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

சோதனைக்கு பிறகு காலதாமதமாக இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் சிங்கப்பூர் சென்றுள்ளன.

மேலும், இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க விமான நிலையத்திலும் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News